பொதுமக்கள் அச்சம் 5 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறப்பு கடல் போல் காட்சியளிக்கும் வெண்டயம்பட்டி பெரிய ஏரி

திருக்காட்டுப்பள்ளி, அக். 23: பூதலூர் தாலுகா வெண்டயம்பட்டி பெரிய ஏரிக்கு உய்யகுண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் 5 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகுண்டான் நீட்டிப்பு வாய்க்கால்களில் போதுமான தண்ணீர் தொடர்ந்து வழங்க வேண்டும். பூதலூர் தாலுகா பாசன பகுதிகளை வஞ்சிக்கும் பொதுப்பணித்துறையை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் சார்பில் கடந்த 15ம் தேதி திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சானூரப்பட்டி, வளம்பக்குடி, புதுக்குடி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பூதலூர் தாசில்தார் சிவகுமார் தலைமையில் கடந்த 14ம் தேதி அதிகாரிகளுடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்பு கொண்டவாறு வெண்டயம்பட்டி பெரிய ஏரிக்கு 5 நாட்கள் முழுமையாக தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் மழைநீரும் சேர்ந்து ஏரி நிறைந்து கடல் போல் காட்சியளித்தது. இதனால் தண்ணீர் வழங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், தாசில்தார் சிவகுமாருக்கும் விவசாயிகள் நன்றி கூறினர்.

Related Stories: