ஆத்தூர், அக்.21: ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியில் தவறி விழுந்த பசுவை மீட்க சென்ற விவசாயி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அப்பம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(58). இவர், நேற்று மாலை அங்குள்ள வசிஷ்ட நதிக்கரையில் பசு மாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது திடீரென வசிஷ்ட நதியில் மாடு தவறி விழுந்தது. இதனைக்கண்டு திடுக்கிட்ட ஆறுமுகம், வசிஷ்ட நதியில் இறங்கி மாட்டினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.