செய்யாறு, அக்.21: செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு பாடப்பிரிவுகளில் காலியிடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.ஆல்பிரட்சேவியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு (2020-21) அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னியல் மற்றும் தொடர்பியல், கணினியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.