நாகர்கோவில், அக்.16: விவசாயிகள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பும் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.