ஆலோசனை கூட்டம்

வருசநாடு, அக். 16: தேனி மாவட்டம் குறித்து கடமலை-மயிலை ஒன்றியத்திலுள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சுப்பிரமணி தலைமை வகித்தார். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் சேரன், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், ஒன்றிய அவைத்தலைவர் கருணாநிதி, துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: