கரூர், அக். 2: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வழக்கம் போல கடைகளின் முன்பு சமூக இடைவெளியின்றி குடிமகன்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்டோபர் 2ம் தேதி(இன்று) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று கடைகள் மூடப்பட உள்ளன. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகவும், காந்தி ஜெயந்தி நாளன்று பயன்படுத்தும் வகையிலும் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஏராளமான குடிமகன்கள் வழக்கத்தை விட அதிகளவு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.