பொள்ளாச்சி, அக்.2: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நகர் மற்றும் கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதன்பின், கடந்த இரண்டு மாதமாக நகர் மட்டுமின்றி, கிராமபுறங்களிலும் கிருமி நாசினி தெளிப்பு பணி மந்தமானது. கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மட்டுமின்றி, நகரை ஒட்டி உள்ள சூளேஸ்வரன்பட்டி மற்றும் ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி, சின்னாம்பாளைம், மாக்கினாம்பட்டி ஊராட்சிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.