பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 1: விவசாயிகளுக்கு எதிரான 3 கருப்பு சட்டங்களையும் திரும்ப பெற கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். சமவெளி பாதுகாப்பு இயக்க தலைவர் பழனிராஜன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மக்கள் அதிகாரம் தேவா, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், ஆதி தமிழர் பேரவை நாத்திகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: