கூட்டுக்குழு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வால்பாறை, அக். 1:  வால்பாறை  அரசு போக்குவரத்து கழக கிளை முன்பு கூட்டுக்குழு சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தொழிலாளர்களின் சட்டவிரோத போக்கை கண்டித்தும், தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் 288 ஏ அரசாணையை ரத்து செய்ய கோரியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். கிளை செயலாளர் யூசுப் வரவேற்றார். நிர்வாகிகள் சிவக்குமார், இளங்கோவன், சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ். சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Related Stories: