ஜோலார்பேட்டை, செப்.30: திருப்பத்தூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலசங்கம் மற்றும் தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலசங்கம் சங்கம் இணைப்பு மற்றும் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சங்க தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். பொது செயலாளர் கலைச்சுடர்மணி சிவகுமார், இணை செயலாளர் துரை சந்தோசு, துணை பொதுச்செயலாளர் முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் கே. சி.வீரமணி கலந்துகொண்டு நல சங்க அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.