சிதம்பரம், செப். 30: புதிய வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவின் முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ, சிதம்பரம் நகர திமுக செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 120 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.