செய்யாறு, செப்.26: 5 மற்றும் 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தொழிற்கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் நேற்று, எம்.என்.ஆர்.உழவர் பேரவையை சேர்ந்த விவசாயிகள், மாவட்ட தலைவர் வாழ்குடை ஜி.புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் ெதாழிற்கல்வியை கட்டயமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:தமிழகத்தில் தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையால் சென்னை, திருப்பூர், கோவை, சேலம் போன்ற தொழில் நகரங்களில், பிற மாநில பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் மாணவர்கள் கலை கல்வியை பயின்று பட்டதாரிகளாக உருவாகியும், தொழில்நுட்ப அறிவு இல்லாததால் வேலை இல்லாமல் மனஉளைச்சலில் உள்ளனர்.