ஈரோடு, மார்ச் 19: ஈரோடு மாநகராட்சியில் பட்ஜெட் மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கேற்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், வருவாய் ஈட்டும் வகையில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, காலியிட வருவாய் இனங்கள் தொடர்பாகவும் பட்ஜெட்டில் வெளியிடப்படும். தற்போது, மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு, கனி மார்க்கெட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதி என பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.