சீர்காழி, மார்ச் 18: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் ஒரு அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் மட்டுமே நிகழ்கிறது. சாலை விபத்துக்கள் அதிகரித்து கொண்டிருப்பதற்கு இது மிக முக்கிய காரணமாகும். மேலை நாடுகளில் மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால் கடும் தண்டனை வழங்கப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் இயக்க முடியாத அளவிற்கு புதிய தொழில் நுட்பத்தில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.