மேலூர், மார்ச் 18: மேலூர் அருகே ரோட்டோரத்தில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தால் தினசரி அந்த இடத்தை வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. கொட்டாம்பட்டி ஒன்றியம் குன்னாரம்பட்டியில் இருந்து சேக்கிபட்டி செல்லும் சாலையில் மூக்கலாங்கண்மாய்கரையில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. ஏற்கனவே சாலை மிக மோசமான நிலையில் உள்ள நிலையில், இப்பெரிய பள்ளம் மேலும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.