அரசு பள்ளிகளில் சிலம்பாட்டத்திற்கான பயிற்சியாளர்களை நியமிக்க கோரிக்கை

மதுரை, ஏப். 24: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உடற்கல்வி பிரிவுகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிலம்பம் போட்டிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. சிலம்பம் தொடர்பாக பயிற்சி முகாம்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு சிலம்பம் விளையாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இவை ஒருபுறம் இருக்க தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சிலம்பம் பயிற்சியாளர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மதுரையில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் முன் வைத்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசிற்கு பள்ளிகளில் சிலம்ப பயிற்சியாளரை நியமிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. கபடிக்கு பயிற்சியாளர்கள் ஓரளவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல சிலம்பத்திற்கும் பயிற்சியாளகளை தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டும் என மூத்த பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post அரசு பள்ளிகளில் சிலம்பாட்டத்திற்கான பயிற்சியாளர்களை நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: