டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி

மதுரை, ஏப். 23: மதுரை பீபீகுளம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (54). டைல்ஸ் பதிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த ஏப்.19ம் தேதி பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மூன்றாவது மாடியிலிருந்து வேலை செய்து கொண்டிருந்த போது அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இளங்கோவன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: