திருச்செங்கோடு, மார்ச் 18: திருச்செங்கோடு காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அருளரசு உத்தரவின்பேரில் திருச்செங்கோடு காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட திருச்செங்கோடு நகரம், புறநகர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம், மொளசி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.