கோவை, மார்ச் 17: கோவை நகர், புறநகரில் பதட்ட நிலை இருக்கிறது. இரு அமைப்புகளை சேர்ந்தவர்களின் மோதல், வாகனங்கள் மீது கல் வீச்சு மற்றும் போராட்ட சம்பவங்கள் தொடர்கிறது. நகரில் பதட்ட நிலையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர போலீஸ் சோதனை, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் 16 செக்போஸ்ட்களில் வாகன தணிக்கை நடக்கிறது. ஓட்டல், லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டல், லாட்ஜ்களில் தங்கும் நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் 1200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை நகரில் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதை தடுக்க கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்டட்டுள்ளது.