சென்னை, மார்ச் 17: அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் திடீரென உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.மாதவரம் அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விஜயசங்கரன் (36). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிக்காக அபுதாபி சென்று பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து கடந்த 9ம் தேதி வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்த மறுநாள் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.