காரைக்கால், மார்ச்.13: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் 13-ம் நாள் விழாவாக தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் பாரதியார் சாலையில் நித்தியக்கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரமோற்சவ விழா கடந்த 28ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நித்திய கல்யாண பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது . பிரம்மோற்சவ விழாவின் 13-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது.