அரவக்குறிச்சி. மார்ச் 13: அரவக்குறிச்சி அருகே தோட்டத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற 14 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அப்பகுதி ஆடு வளர்க்கும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியம் நாகம்பள்ளியை அடுத்த அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(42). விவசாயி. இவர் 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.