சேந்தமங்கலம், மார்ச் 13: சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டியில், 222 பயனாளிகளுக்கு 5550 கோழிக்குஞ்சுகளை சந்திரசேகரன் எம்எல்ஏ வழங்கினார். கால்நடைப்பராமரிப்பி துறை சார்பில், ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு கோழி வழங்கும் விழா சேந்தமங்கலம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கால்நடை மருத்துவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு 109 பயனாளிகளுக்கு 2725 கோழிக்குஞ்சுகளை வழங்கினார்.