திருவில்லிபுத்தூர், மார்ச் 12: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முத்து சாரதா தலைமை வகித்தார். நீதிபதிகள் சுமதி சாய்பிரியா, பரிமளா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நீதிபதி முத்து சாரதா பேசுகையில், ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விருதுநகர் மாவட்டத்தில் புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.