வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது

சிவகாசி, ஏப். 28: சிவகாசி புதுதெருவை சேர்ந்தவர் மரியசந்தனம் (24). இவர் சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாரணாபுரம் போஸ் காலனியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் மரியசந்தனத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் கத்தியுடன் நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

The post வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: