மே 1ல் டாஸ்மாக் அடைப்பு

விருதுநகர், ஏப்.23: மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், எப்.எல். 1, 2, 3, 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மே 1 அன்று முழுவதும் தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் எப்.எல். 1, 2, 3 மற்றும் 11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post மே 1ல் டாஸ்மாக் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: