விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஏப். 24: விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன்(41). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம், கருத்தப்பாண்டி, முருகன், முனியசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து நாட்டாமை ராஜராம் என்பவரை மாற்ற சொல்லி தகராறு செய்து வந்துள்ளனர். இதற்கு பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 4 பேரும் சேர்ந்த நாட்டாமை ராஜாராமிடம் இருந்த பொது பண்டு பணம், கணக்கு நோட்டுகளை தகராறு செய்து வாங்கி வந்துள்ளனர். இதை அறிந்த பாண்டியராஜன் தனது பங்கு பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். 4 பேரும் ஒன்று சேர்ந்து பாண்டியராஜன் மற்றும் அவரது மகன் மணிமாறனை கத்தி, கல்லால் தாக்கி காயப்படுத்தி பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி சென்றுள்ளனர்.

வச்சக்காரப்பட்டி போலீசில் பாண்டியராஜன் புகாரில் மகாலிங்கம், கருத்தப்பாண்டி, முருகன், முனியசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே வழக்கில் தனபாண்டியம்மாள்(45) என்பவரை ஆவுடையம்மாள், மல்லிகா, பாண்டிமணி, மணிமாறன், ராஜபாண்டியன் சேர்ந்து தாக்கிய காயம் ஏற்படுத்தியதாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு வழக்குகளிலும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: