தகராறில் வாலிபருக்கு வாளால் வெட்டு

சிவகாசி, ஏப். 25: சிவகாசி அருகே வடப் பட்டி கீழூரை சேர்ந்தவர் ராமர்பாண்டி மகன் சீனிவாசகன் (32). இவர் நடுவபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேஷ்பாண்டி என்பவருடன் சீனிவாசகனுக்கு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று சீனிவாசகன் தனது ஊருக்கு திரும்புவதற்காக வந்த போது அவரை கணேஷ்பாண்டி தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார்.

மேலும் கணேஷ்பாண்டி தனது கையில் வைத்திருந்த வாளால் சீனிவாசகனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் வலது காதில் ரத்தகாயம் ஏற்பட்டது. இது குறித்து சீனிவாசகன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கணேஷ்பாண்டி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகராறில் வாலிபருக்கு வாளால் வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: