இறந்த தாய்க்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு மனம் தளராமல் தேர்வு எழுதிய மாணவர்

விருதுநகர், ஏப். 25: விருதுநகர் அருகே தனது தாயார் இறந்த நிலையிலும் இறுதிச் சடங்கு செய்து விட்டு உடனடியாக பள்ளிக்கு தேர்வு எழுதிட மாணவர் வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் அருகே உள்ளது மீசலூர் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி இந்திரா(56). இவர்களது மகள் மகாலட்சுமி(16). மகன் ரமேஷ்கிருஷ்ணா(14). லட்சுமணன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து, இந்திரா இரு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில், இந்திராவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று முன் தினம் காலை உயிரிழந்தார். ரமேஷ்கிருஷ்ணாவிற்கு நேற்று முன் தினம் பிற்பகல் 9ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு இருந்தது. தனது தாயாருக்கு இறுதி சடங்கு செய்த பின் ரமேஷ்கிருஷ்ணா, பின்னர், தேர்வு எழுதுவதற்காக மீசலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த சக மாணவர்கள், ரமேஷ் கிருஷ்ணாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

The post இறந்த தாய்க்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு மனம் தளராமல் தேர்வு எழுதிய மாணவர் appeared first on Dinakaran.

Related Stories: