வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி

 

வத்திராயிருப்பு, ஏப்.29: வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டியில், வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி தலைமை வகித்தார். வனச்சரகர் மோகன்ராஜ் சிறப்புரை ஆற்றினார்.

வ.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி சாந்தாராம், வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் குமரேசன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் நாராயணன், வைரமுத்து மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், மரம் வளர்த்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதுபோன்று எஸ்.கொடிக்குளம் மற்றும் மகாராஜபுரத்திலும் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: