வேலூர், மார்ச்.12:கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் பரவாமல் தடுக்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இருமலுடன் கூடிய காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சளி பிரச்னை, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்றவை, இந்த நோயின் அறிகுறிகள். எச்சில் வழியாக, இந்த வைரஸ் பரவும். கைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் வழியாகவும் பரவும் வாய்ப்புள்ளது.