ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 11: தகுதி வாய்ந்த சங்கங்கள் எவை என்பதை தெளிவுப்படுத்தி 14வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்தையை உடனே தொடங்க தமிழக அரசை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.அரசுப் போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தொமுச மண்டல பொதுச் செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியூ பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: