காரைக்கால், மார்ச் 11: காரைக்காலில் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி, தற்காப்பு பாதுகாப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியை, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.தேசிய பாதுகாப்பு குழுமம் 4-3-1966 ம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடர்ந்து, 4-3-1972 முதல் தேசிய பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி தொழிலாளர் துறை சார்பில், நடப்பு ஆண்டு 49வது தேசிய பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளில் தற்காப்பு பாதுகாப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியை, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த தேசிய பாதுகாப்பு தினத்தின் நோக்கமானது, தொழிற்சாலையில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைப்பதாகும். அதன்படி இந்த குழுமமானது ஒவ்வொரு தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அதன் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தி வருகிறது.ஒவ்வொரு தொழிற்சாலையும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் தொழிலாளர்களின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது இந்த குழுமத்தின் தொலை நோக்கு பார்வையாக தொழிற்சாலைகளில் நடக்கும் பெரும் விபத்துகளை மட்டுமின்றி சிறுகாயங்கள் கூட இல்லாமல், பணிபுரியும் இடம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது.