வலங்கைமான், மார்ச் 11: வலங்கைமான் பகுதியில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபார்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் திருட்டுபோவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போதும் ஒரு பைக் ஒன்று காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வலங்கைமான் எஸ்.ஐ செந்தில் குமார் தலைமையில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வலங்கைமான் கடைவீதி பகுதியிலிருந்து தனித்தனியே இரண்டு பைக்குகளில் வந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவர்களை வலங்கைமான் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.