தஞ்சை, மார்ச் 10: பாரத் கல்வி குழுமத்தில் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் பாரத் மகளிர் மன்றம் சார்பில் மகளிர் தினவிழா தஞ்சாவூர் ராமசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. பாரத் மகளிர் மன்ற நிறுவனர் புனிதா கணேசன் பங்கேற்று பெண்கள் சமூகத்தின் உயரிய சக்தி. அத்தகு சக்தி படைத்த பெண்கள் தங்கள் திறமை, செயல்பாடுகளை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றார்.திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி பங்கேற்று பெண்களை தவிர்த்து எந்த பாரதியும் பிறந்துவிட முடியாது. எல்லா பாரதியையும் உருவாக்குபவர் ஒரு பெண். கவிஞர்கள் உருவாக காரணம் சொல்லை கையாள தெரிந்திருப்பது தான் என்றார்.தஞ்சை மருத்துவக்கல்லூரி டீன் மருத்துவர் குமுதா லிங்கராஜ் பங்கேற்று பெண்களுக்கு பெண்கள் தான் எதிரியாக இருக்கிறார்கள். ஒருபோதும் ஆண்கள் எதிரிகள் இல்லை. நம் வார்த்தை, செயல்பாட்டில் சரியாக இருந்தால் எதற்கும் பயப்பட தேவையில்லை என்றார்.