காரைக்கால், மார்ச் 10: மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் நகராட்சி மாநாட்டு கூடத்தில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், பெண் குழந்தைகளை பாதுகாப்பு மற்றும் கல்வி கற்பிப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சுபாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குனர் சத்யா, காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ராஜேஸ்வரி, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் மலைக்கனி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விமலா, ஹேண்டு அண்டு ஹேண்டு தனியார் நிறுவன பிரமுகர் சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.