திருத்துறைப்பூண்டி மார்ச் 10: கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டாவும், கோயில் நிலங்களை சாகுபடி செய்பவர்களுக்கு நில உரிமையும் வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும் நீண்ட காலமாக போராடி வருகிறது.அதை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு 18 வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா வழங்கிடும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பிறகு அந்த ஆணையை செயல்படுத்துவதற்கு முன்பாகவே இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் இதை அரசாணையை நிறுத்திவைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கினர். இதனால் அரசாணை 318ஐ அமுல் நடத்த முடியாமல் உள்ளது.இதனால் கோயில் இடங்களில் 40 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு குடிமனைபட்டா இல்லாமல் அரசின் பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது.