தரங்கம்பாடி, மார்ச் 6: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே அரங்ககுடியில் உள்ள குளத்தை தூர்வாரும்போது சவுடு மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரங்ககுடியில் உள்ள குளத்தை தூர்வாரி குளத்தில் உள்ள வண்டல் மற்றும் சவுடு மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள தரங்கம்பாடி தாசில்தார் கடந்த செப்டம்பர் மாதம் 3 நாட்களில் குளம் வெட்டப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தார். முதல் நாள் குளத்தை தூர்வாரும் பணி நடந்தது. மறுநாள் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து குளம் தண்ணீரால் நிரம்பிவிட்டது.