குமாபாளையம், மார்ச் 6: குமாரபாளையத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டுமென, நாமக்கல் வந்த மத்திய இணை அமைச்சரை, பாஜ மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டார். நாமக்கல்லில் நடந்த புதிதாக மருத்துவ கல்லூரிக்காக கால்கோள் விழாவில் பங்கேற்ற மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவை, நாமக்கல் மாவட்ட பாஜ செயலாளர் ஓம்சரவணா நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கடந்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒப்புதல் மற்றும் நிதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.