கோவிந்தபேரி கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா

வீரவநல்லூர், மார்ச் 6:  கோவிந்தபேரி மனோ கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரி மனோ கல்லூரியில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவிற்கு கல்லூரி முதல்வர் மோனி தலைமை வகித்தார். கணினி துறை தலைவி மேரி ராஜி பிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக இயற்பியல் துறை தலைவர் சுந்தரகண்ணன் கலந்துகொண்டு ராமன் விளைவு பற்றி மாணவர்களிடையே விளக்கமளித்தார். தொடர்ந்து மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் கலந்துரையாடல்களும் நடந்தது. இதில் பேராசிரியர் தெய்வநாயகம், கணித துறை தலைவர் அர்லின் ஜெயமேரி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அறிவியல் துறை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுகலை கணிதத்துறை தலைவர் கிறிஸ்டினா நன்றி கூறினார்.

Related Stories: