காரைக்கால், மார்ச் 4: காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், மகளிர் பிரச்னைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட பெற்றோர் சங்கம், அன்னை தெரசா சமூக சேவை இயக்கம், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி மகளிர் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து, கல்லூரி வளாகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலாஜி தலைமை வகித்து, கல்லூரியின் செயல்பாடுகளும், மாணவிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார். கல்லூரி மகளிர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை அனந்தநாயகி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பெற்றோர் சங்க தலைவர் சோழசிங்கராயர், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், மாணவர்களின் வரவேற்பு குறித்தும் பேசினார். பெற்றோர் சங்க செயலர் செல்வமணி வாழ்த்தி பேசினார்.