சின்னமனூர், மார்ச் 4: சின்னமனூர் அருகே, கிடப்பில் போடப்பட்ட அய்யம்பட்டி-குச்சனூர் இணைப்புச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தென்னை, காய்கறிகள், தக்காளி, வாழை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து குச்சனூருக்கு செல்லும் இணைப்புச் சாலை சுமார் 2 கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருந்ததால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கியது. விவசாயப் பணிகளுக்கு செல்லும் வாகனங்களின் டயர்களும் பஞ்சராகின. இதனால், போக்குவரத்துக்கு விவசாயிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.