வேலூர், மார்ச் 3: வேலூர் மத்திய சிறையில் முருகன் செல்போன் பயன்படுத்திய வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 18ம் தேதி முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.