முத்துப்பேட்டை, மார்ச் 2: முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பெத்தன்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(62). இவர் தனது மனைவி தமிழரசியுடன் (45)பைக்கில் தில்லைவிளாகம் உறவினர் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். கோபாலசமுத்திரம் சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி பைக்கை இடிப்பது போல் அணைத்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தமிழரசிக்கு தலையில் பலத்தை காயம் ஏற்பட்டது. ராஜேந்திரன் சிறுகாயத்துடன் தப்பினார்.