இடுக்கி அணையில் நில அதிர்வு

கூடலூர், மார்ச் 2: கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 1.5 முதல் 2 வரை நிலநடுக்கம் பதிவானது. இதனால், பொதுமக்கள் இது குறித்து உணரவில்லை என்கின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 க்கும் 10.22க்கும் இரண்டு முறை இதேபோல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால், சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என இடுக்கி அணை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: