காளையார்கோவில், மார்ச் 2: பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காளையார்கோவில் காவலர்கள் குடியிருப்பு தற்போது எந்த பயன்பாடும் இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. காளையார்கோவில் காவலர்கள் குடியிருப்பு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்தும் ஓடுகளினால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் முழுவதும் உடைந்த நிலையிலும் உள்ளது. இதனால் காவலர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டத்தில் உள்ள இப்பகுதியில் விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தல் உள்ளது.