பெரம்பலூர், மார்ச் 1: பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் மாசிமக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் மாசிமக பெருந்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.அதேபோல் நடப்பாண்டும் திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு யாகம் செய்யப்பட்டு பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.