கரூர், மார்ச் 1: டிஎன்எஸ்டிசி ஓய்வூதியர் மற்றும் பென்சனர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சுப்ரமணி தலைமை வகித்தார். முத்துக்கிருஷ்ணன், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பன்னீர் செல்வம் வரவேற்றார். இளங்கோ நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.