கருமந்துறையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ஆத்தூர், பிப்.28: கருமந்துறையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இது குறித்துவாழப்பாடி கோட்டமின் வாரிய செயற்பொறியாளர் பாரதி கூறியிருப்பதாவது: வாழப்பாடி  மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட கருமந்துறை மின்வாரிய அலுவலகத்தில், நாளை(29ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மின்வாரிய நுகர்வோர்கள் கலந்து கொண்டு, மின்சாரம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: