புதுக்கோட்டை, பிப்.28: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் பழுதடைந்த நிலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே சில வருடங்களுக்கு முன்பு புதிதாக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அந்த உயர் கோபுர மின்விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் வீசப்பட்ட கஜா புயலில் உயர்கோபுர மின்விளக்கு கீழே சாய்ந்து விழுந்து பழுதடைந்தது. இதனால் உயர் கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.